கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி இயக்கம் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தில்லியில் காணொலி மூலமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நாட்டில் கரோனா பரவல் என்பது இன்னும் இருந்து வருகிறது. மேலும், பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இயக்கங்களும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி இயக்கம் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று(வெள்ளிக்கிழமை) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மேலும், தடுப்பூசி இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவது, கரோனா பாதிப்புள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.