ராஜாராம் மோகன்ராய் சிலை திறப்பு விழா

ராஜாராம் மோகன்ராயின் 250வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி திறந்து வைத்தார். 
ஜி.கிஷன் ரெட்டி
ஜி.கிஷன் ரெட்டி

ராஜாராம் மோகன்ராயின் 250வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி திறந்து வைத்தார். 

கொல்கத்தாவில் ராஜாராம் மோகன்ராயின் 250வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி  திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியை கிழக்கு கலாச்சாரத் துறை அமைச்சகம் சார்பில் வங்காள தேசம் ஆளுநர் முன்னிலையில் ராஜாராம் மோகன்ராயின் நூலகத்தின் 50ஆவது ஆண்டும் கொண்டாடப்பட்டது. வருங்கால தலைமுறையினர் இவரது எண்ணங்களை தொடர முயற்சிக்க வேண்டும் என ஆளநர் கூறினார். 

சிலையை திறந்து வைத்துப் பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது:

இன்று ராஜாராம் மோகன்ராயின் 250வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியா மற்றும் பிரதமரின் சார்பாக நான் எனது நன்றிக் கடனை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராயின் நூலகம் 50 வருடத்தை நிறைவேறியுள்ளது. ‘அம்ரித் மஹோத்சவ்’ எனும் திட்டத்தின் கீழ் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை பெறுமைப்படுத்தி வருகிறோம். அவரது சிலையை நிறுவியது பெருமையாக இருக்கிறது. வருங்கால தலைமுறையினர் அவரது கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com