பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பிற்காக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"மே27 அன்று கலந்துக்கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இருந்தாலும் சில கட்சிகள் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். சாதி வாரியாக எல்லாப் பிரச்சனைகளையும் விவாதம் செய்ய இருக்கிறோம். மற்ற கட்சியினரும் இதுக்குறித்து கருத்து கூறினால் நன்றாக இருக்கும்" என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.