ஜம்மு-காஷ்மீர்: போதைப்பொருள், வெடிபொருள்களுடன் 3 பேர் கைது 

ஜம்மு-காஷ்மீரில் போதைப் பொருள் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
ஜம்மு-காஷ்மீர்: போதைப்பொருள், வெடிபொருள்களுடன் 3 பேர் கைது 

ஜம்மு-காஷ்மீரில் போதைப் பொருள் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

குப்வார காவல்துறை மற்றும் ராணுவம் நேற்று மாலை வழக்கமான சோதனையின் போது, ஒரு வாகனத்தில் இருந்த 7 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு வெடிபொருட்கள் போலீசாரால் மீட்கப்பட்டது. 

இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகப் போதைப்பொருள் மற்றும் வெடிகுண்டுகளை பள்ளத்தாக்கின் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. 

மேலும், சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com