தில்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஜூன் 9 வரை அமலாக்கத்துறை காவல்

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்  (கோப்புப்படம்)
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)


தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பணமோசடி வழக்கில் சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவரக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ. 4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கியது.

இதுதொடர்பாக ஏற்கெனவே 2018-இல் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்திய நிலையில், சத்யேந்தர் ஜெயினை நேற்றிரவு அமலாக்கத் துறை கைது செய்தது.

தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com