தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவரக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ. 4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கியது.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறும் பாஜக
இதுதொடர்பாக ஏற்கெனவே 2018-இல் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்திய நிலையில், சத்யேந்தர் ஜெயினை நேற்றிரவு அமலாக்கத் துறை கைது செய்தது.
தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.