பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை: மம்தா பானர்ஜி

மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் குறித்து பேசும்போது  “8 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து இந்தியர்களின் வாழ்க்கையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது. பல போலி வாக்குறுதிகளுடன் தங்கள் பயணத்தைத் தொடங்கியவர்களால் மக்கள் சலிப்படைந்துவிட்டனர். இந்த 8 வருட பயணம் தோல்வியானது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்காது. இனி அவர்கள் வெல்ல வாய்ப்பே இல்லை” எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com