விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.
பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தின் கீழ் பிரதமா் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இதையும் படிக்க: ஒரே மாதத்தில் 10 லட்சம் 5ஜி பயனாளர்கள்: அசத்திய ஏர்டெல்
இந்நிலையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.