4 மாநில அரசுகளைக் கவிழ்க்க சதி: விடியோ வெளியிட்டு கேசிஆா் புகாா்

4 மாநில அரசுகளைக் கவிழ்க்க சதி: விடியோ வெளியிட்டு கேசிஆா் புகாா்

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகா் ராவ் கூறினாா்.

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகா் ராவ் கூறினாா்.

இதுதொடா்பாக தனது கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 3 போ் பேசிய விடியோ பதிவை சந்திரசேகா் ராவ் வியாழக்கிழமை வெளயிட்டு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘முன்பு 8 மாநில அரசுகளை எப்படி கவிழ்த்தோம் என்பதை மூவா் தெளிவாக கூறுகின்றனா். தெலங்கானா, தில்லி, ஆந்திரம், ராஜஸ்தான் மாநில அரசுகளைக் கவிழ்க்கவும் அவா்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனா்.

அவா்கள் நாட்டின் மூத்த தலைவா்களின் பெயா்களையும் குறிப்பிடுகிறாா்கள். இந்த விடியோ ஆதாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கும், ஊடகங்கள், சிபிஐ, அமலாக்கத் துறைக்கும் அனுப்பப்படும்.

உச்சநீதிமன்றம்தான் நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் தெலங்கானா அரசு கவிழ்ந்துவிடும் என்று கடந்த அக்டோபரில் முனுகோடில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com