மேற்கு நேபாளத்தில் இன்று காலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று சக்திவாய்ந்த 6.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் ரிக்டர் அளவில் 4.1 ஆளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி,
இன்று காலை 5.13 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மாண்டுவில் இருந்து 750 கிமீ தொலைவில் உள்ள பாஜுரா மாவட்டத்தின் கப்டாட் செடெடாஹா கிராமப்புற நகராட்சியில் உள்ள கடா பகுதியை மையமாகக் கொண்டது.
புதனன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்திற்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.
நேபாள ராணுவம் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
ஏப்ரல் 2015-ல், நேபாளத்தை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான பேரழிவுகளுமான நிலநடுக்கம் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 22,000 பேர் காயமடைந்தனர். 8,00,000 வீடுகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.