ஹிமாசலப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர், தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இருப்பார் என்றுக பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறோம் என்றும் தாக்குர் தலைமையில் தேர்தல் நடந்துள்ளது. எனவே அவர் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்பார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹிமாசல் சட்டப்பேரவை தேர்தலுக்கான எந்த பிரசாரத்திலும் பங்கேற்கவில்லை, அவர்கள் தொழில்சார் தலைவர்கள் என்றும் கூறினார்.
மாநிலத்தில் பாஜகவும், காங்கிரஸுவும் மாறி மாறி வருவதால், ஆனால் இந்தத் தேர்தலில் அது நிச்சயம் மாறும். கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பாரம்பரியத்தை மாற்ற மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஹிமாசலத்தில் மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். எனவே, இங்கு வாக்குப்பதிவு எப்போதும் நன்றாக இருக்கிறது. மக்கள் பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறார்கள். பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலையை நான் காண்கிறேன் என்று நட்டா கூறினார்.