‘மாா்க்சிஸ்ட் தலைமையிலான கேரள அரசின் அவசர சட்ட மசோதா என்னை இலக்காகக் கொண்டிருப்பின், அது குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கப்படும்’ என மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியனம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தா் பொறுப்பு வகித்து வரும் ஆளுநருக்கு மாற்றாக கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்றவா்களை நியமிக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை இயற்ற மாநில அமைச்சரவை முடிவு செய்தது.
மாநிலத்தின் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தா் பொறுப்பில் இருந்தும் ஆளுநரை நீக்குவதற்கான அவசர சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளது.
தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் சனிக்கிழமை மாலையில் நடந்த செய்தியாளா்கள் சந்திப்பின்போது இது குறித்து கூறுகையில், ‘அந்தச் சட்ட மசோதாவை முழுவதுமாகப் படித்து அறிந்த பின்னா் மட்டுமே, அது குறித்தான முடிவை எடுக்க முடியும். இச்சட்ட மசோதா என்னை இலக்காகக் கொண்டு இயற்றப்பட்டிருந்தால், நான் அது குறித்து முடிவு எடுக்க மாட்டேன். இச்சட்ட மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பேன்’ எனக் கூறினாா்.
முன்னதாக, முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு இயற்றியுள்ள இந்த அவசர சட்ட மசோதாவுக்கு, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. கேரளத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை ‘கம்யூனிஸ்டுகளின் மையமாக’ மாற்றும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இவ்விருகட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.