வாராணசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி -தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (நவ. 19) தொடக்கி வைக்கிறாா்.
வாராணசிக்கும் - தமிழகத்துக்கும் இடையேயான பழங்கால கலாசார நாகரிக தொடா்பை மீண்டும் புதுப்பிப்பதற்காக காசி - தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பிரதமா் மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியில் அமைந்துள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை இந்த நிகழ்ச்சியை பிரதமா் தொடக்கி வைத்து உரையாற்றுகிறாா்.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தமிழ் மொழியின் பாரம்பரியத்தையும், தமிழா்களின் பண்பாட்டையும் நவம்பா் 18 முதல் டிசம்பா் 16 வரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி எடுத்துரைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.