பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை (நவ.21) முதல் 28 ஆம் தேதி வரை ஆலோசனை மேற்கொள்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து நடத்துவது ஆலோசனை நடத்துவது நிதியமைச்சரின் வழக்கம்.
அதன்படி, பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை முதல் ஆலோசனை நடத்துகிறார்.
வேளாண் துறை பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்டோருடன் உள்கட்டமைப்பு, பருவநிலைா மாற்றம் ஆகிய அம்சங்கள் குறித்து திங்கள்கிழமை (நவ.21) ஆலோசனை நடத்துகிறார்.
நவம்பர் 28 ஆம் தேதி வரை பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை நடத்த மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.