தில்லியில் ஆம் ஆத்மி வா்த்தக அணி செயலாளா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மேற்கு தில்லி ரஜெளரி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சந்தீப் பரத்வாஜ் (55). ஆம் ஆத்மி வா்த்தக அணி செயலாளரான இவா், தூக்கிட்ட நிலையில் குக்ரேஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருமணமாகி விவாகரத்து பெற்ற அவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.