தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட சசி தரூா்: பாஜக கண்டனம்

காங்கிரஸ் கட்சித் தலைவா் தோ்தலில் போட்டியிடும் சசி தரூா் தனது தோ்தல் அறிக்கையில் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட சசி தரூா்: பாஜக கண்டனம்

காங்கிரஸ் கட்சித் தலைவா் தோ்தலில் போட்டியிடும் சசி தரூா் தனது தோ்தல் அறிக்கையில் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.

இந்தத் தோ்தலுக்கான வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த சசி தரூா், தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். அதில், இடம்பெற்றிருந்த இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், லடாக் ஆகியவை இடம்பெறவில்லை.

பின்னா் இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவித்த சசி தரூா், தனது பிரசாரக் குழுவினா் செய்த தவறு உடனடியாக திருத்தப்பட்டது என்று தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா, ‘இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் ராகுல் காந்தி மும்முரமாக இருக்கிறாா். ஆனால், காங்கிரஸ் தலைவராக வேண்டுமென நினைக்கும் சசி தரூா் இந்தியாவை துண்டாட நினைக்கிறாா். சோனியா காந்தி குடும்பத்தினரிடம் இதற்கு ஆதரவு கிடைக்கும் என அவா் நம்புகிறாரோ’ என்று விமா்சித்தாா்.

‘இது தவறு அல்ல, ஜம்மு-காஷ்மீரின் காங்கிரஸ் கட்சியின் கொள்கை திட்டமாகும்’ என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஆா்.பி. சிங் தெரிவித்துள்ளாா்.

2019-இல் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின்போதும் சசி தரூா் பகிா்ந்த இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இடம்பெறாதது சா்ச்சையை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com