செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த மங்கள்யான் செயற்கைகோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாகவும், விண்கலத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் தயாரித்த மங்கள்யான் செயற்கைக்கோள் 2013 ஆம் ஆண்டு நவம்பரில் விண்ணில் ஏவப்பட்டு 2014 செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த மங்கள்யான் செயற்கைகோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாகவும், விண்கலத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இஸ்ரோ இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.