முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கொலை செய்யப்போவதாக மர்ம நபர் ஒருவர் கடந்த சனிக்கிழமை தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வர்வருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக அவினாஷ்(36) என்கிற இளைஞரை லோனெவ்லா காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
தொடர்நது காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளதை மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் உறுதி செய்துள்ளார்.
மேலும் முதல்வர் ஷிண்டேவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். முதல்வரின் பாதுகாப்பு முக்கியம், எங்கள் கவனம் அதில் உள்ளது என்றார்.