ஜம்மு-காஷ்மீா்: 4 பயங்கரவாதிகள் பலி

ஜம்மு-காஷ்மீரில் புதன்கிழமை இரு வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் புதன்கிழமை இரு வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா். அவா்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் டிரச் கீகம் பகுதியில் பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்ததின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் 2 போ் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி நடைபெற்ற புலம்பெயா் தொழிலாளியின் கொலையிலும், அக்டோபா் 2-ஆம் தேதி நிகழ்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரியின் கொலையிலும் தொடா்புடையவா்கள் என போலீஸாா் தெரிவித்தனா்.

அதே மாவட்டத்தில் மூலு பகுதியில் பாதுகாப்பு படையினா் மேற்கொண்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையில் ஏற்பட்ட மோதலில், தடை செய்யப்பட்ட லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மோதல் நடைபெற்ற இரு இடங்களிலிருந்தும் 4 ஏகே ரக துப்பாக்கிகளும், ஒரு கைத்துப்பாக்கியும் பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com