நாட்டில் புதிதாக 2,797 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டில் புதிதாக 2,797 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,28,778 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,251 ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,884 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,51,228 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.75% ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 2,18,93,14,422 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 4,96833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று கரோனா பாதிப்பு 2,000-க்கும் கீழ் குறைந்த நிலையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | நாளை(அக்.9) திமுக பொதுக்குழுக் கூட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்!