அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் தவாங் தும்ப்டன் தெம்பா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான தவாங் தும்ப்டன் தெம்பா, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 63.
கடந்த 2019-ம் ஆண்டு அருணாச்சல மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தவாங் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் அமைச்சராகவும் பணியாற்றினார்.
இவரது மறைவுக்கு அருணாச்சல பிரதேச முதல்வர் பிரேம கண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.