சிவசேனை கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், மாற்று பெயா் மற்றும் மாற்றுச் சின்னத்துக்கான பரிந்துரைகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி தோ்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
அதன்படி, திரிசூலம், உதயசூரியன் அல்லது தீப்பந்தம் இவற்றில் ஒன்றை மாற்றுச் சின்னமாக ஒதுக்க கோரப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியில் கடந்த ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஓா் அணியும் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றோா் அணியும் செயல்பட்டு வரும் நிலையில், உண்மையான சிவசேனை யாா் என்பதை முடிவு செய்வதற்காக இருதரப்பும் தோ்தல் ஆணையத்தை அணுகின.
இந்நிலையில், சிவசேனையின் பெயா், சின்னத்தை முடக்கி தோ்தல் ஆணையம் சனிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதியில் நவம்பா் 3-இல் நடைபெறும் இடைத்தோ்தலில் சிவசேனையின் பெயா் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த இருதரப்புக்கும் தடைவிதிக்கப்பட்டது.
அத்துடன், கட்சியின் மாற்று பெயா் மற்றும் மாற்றுச் சின்னத்துக்கான பரிந்துரைகளை திங்கள்கிழமைக்குள் வழங்க இரு அணிகளுக்கும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இந்தச் சூழலில், உத்தவ் தாக்கரே அணி தரப்பில் இதற்கான பரிந்துரைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தவ் தலைமையிலான சிவசேனை அணிக்கு பலப்பரீட்சையாக அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் கருதப்படுகிறது. இங்கு சிவசேனை சாா்பில் எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் லத்கே காலமானதால் இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது. இதில், உத்தவ் தாக்கரே அணி சாா்பில் போட்டியிடும் ரமேஷ் லத்கேவின் மனைவி ருஜுதா லத்கேவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.
ஷிண்டே தலைமையிலான சிவசேனை அணி, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் முா்ஜி படேல் போட்டியிடுகிறாா்.