அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பிஎஸ்எப் மற்றும் அசாம் காவல்துறையின் கூட்டுக் குழுவினர் இணைந்து ஒரு டிரக்கில் இருந்து ரூ.45 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை மிசோரமில் இருந்து கரீம்கஞ்ச் வழியாக திரிபுரா நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது டிரக்கில் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் பிஎஸ்எப் மற்றும் கரீம்கஞ்ச் காவல்துறையினர் டிரக்கை இடைமறித்து, அதிலிருந்த 764 சோப்பு பெட்டிகளில் நிரம்பிய வைக்கப்பட்டிருந்த ஹெராயின், ஓட்டுநரின் இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினார்.
ஹெராயின் சுமார் 9.47 கிலோ எடையும், அதன் மதிப்பு ரூ.47.4 கோடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிரக்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.