தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் 3 மாதத்திற்குள் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியமனம் செய்யவில்லையெனில் மனுதாரர் நீதிமன்றம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.