ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தின் ரயில் பாலத்தில் செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்ட விபரீதத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லதேஹர் மாவட்டத்தில் ரயில்வே பாலத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நண்பர்களான நசீர் அன்சாரி, ஃபிர்தௌஸ் அன்சாரி மற்றும் ரிஸ்வான் அன்சாரி ஆகிய மூவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை காலா நதி ரயில் பாலத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சரக்கு ரயில் மூவர் மீதும் மோதியது. நசீர் பாலத்தின் கீழ் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இருவரும் அருகில் உள்ள லதேஹரின் சர்தார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.