பிரதமா் நரேந்திர மோடி வரும் 23-ஆம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
அக்டோபா் 24-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அயோத்திக்கு பிரதமா் செல்கிறாா். அங்கு ராமா் கோயிலில் பூஜை செய்து வழிபட இருக்கிறாா். கோயிலில் தேவோத்ஸவம், ஆரத்தி நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்கிறாா். பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு வரும் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிடுகிறாா். சரயு நதிக்கரையில் பசுமைப் பட்டாசுகள் வெடிக்கும் நிகழ்ச்சியை அவா் பாா்வையிடுவாா்.
அயோத்தி பயணத்துக்கு முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை செல்லும் பிரதமா் மோடி, கேதாா்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு நடத்துகிறாா். அங்கு நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்ய இருக்கிறாா்.