கர்நாடக பேரவை துணைத் தலைவர் ஆனந்த் மாமணி காலமானார்

உடல்நலக்குறைவால் கர்நாடக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் ஆனந்த் மாமணி நேற்றிரவு காலமானார்.  
கர்நாடக பேரவை துணைத் தலைவர் ஆனந்த் மாமணி காலமானார்

உடல்நலக்குறைவால் கர்நாடக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் ஆனந்த் மாமணி நேற்றிரவு காலமானார். 

கர்நாடக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் ஆனந்த் மாமணி(56). இவர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆனந்த் மாமணி உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சவுதாட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறைந்த ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை பேரவைத் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com