தீவிர புயலாக சிட்ரங் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (அக்.23) காலை கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்காளவிரிகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதையும் படிக்க- தீபாவளி: 5.63 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் வெளியூர் பயணம்
பின்னா், படிப்படியாக நேற்று மாலை புயலாக மாறிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் வங்கதேசம் அருகே நாளை காலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.