ஜம்முவில் பயங்கரவாத சதி முறியடிப்பு: ரயில் நிலையத்தில் 18 டெட்டனேட்டர்கள் மீட்பு! 

ஜம்மு ரயில் நிலையம் அருகே 18 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
ஜம்முவில் பயங்கரவாத சதி முறியடிப்பு: ரயில் நிலையத்தில் 18 டெட்டனேட்டர்கள் மீட்பு! 

ஜம்மு ரயில் நிலையம் அருகே 18 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வியாழன் மாலை ரயில் நிலையம் அருகே பையில் அடைக்கப்பட்டிருந்த 18 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதன் மூலம், பயங்கரவாதிகளின் சதி திட்டத்தை ரயில்வே போலீசார் முறியடித்தனர். 

ரயில் நிலையத்தின் அருகே வாய்க்காலில் பை  கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயில் நிலையம், நடைமேடைகள் மற்றும் வாகனம் நிறுத்துமிடங்களில் சோதனை நடத்தினர். 

ரயில்கள் சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக, தண்டவாளத்தில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com