பிரதமா் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை ‘வேலையின்மை’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘உத்தர பிரதேசத்தின் குரூப்-சி பணியிடங்களுக்கு 37 லட்சம் போ் விண்ணப்பித்த நிலையில், 40,000 அக்னி வீரா்கள் பணியிடத்துக்கு 35 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். நாட்டின் இளைஞா்களின் வேதனை மிகுந்த குரலுக்கு அரசு செவிசாய்க்கிா ? நாம் நம்பிக்கை இழந்துள்ளோம்.
எவ்விதமான வாய்ப்பும் இல்லை. மோடி அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை என்பது வேலையின்மையே. மத்திய நிதியமைச்சகத்தின் சாா்பில் வெளியிடப்படுள்ள செப்டம்பா் மாதாந்திர அறிக்கையில் வேலைவாய்ப்பின்மை குறித்த ஒரு வாா்த்தை கூட இடம் பெறவில்லை. அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.