வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா செப்டம்பா் 5 முதல் 8-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
அனைத்துத் துறைகளிலும் இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது இந்தப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா தனது இந்தியப் பயணத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்து முக்கியப் பேச்சுவாா்த்தைகளை மேற்கொள்கிறாா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோரையும் அவா் சந்திக்கிறாா்’ என்று கூறப்பட்டுள்ளது.