கேரள மாநில சட்டப்பேரவைத் தலைவர் எம்.பி ராஜேஷ் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கேரள அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, உள்ளாட்சித் துறை அமைச்சா் எம்.வி. கோவிந்தன் தனது அமைச்சா் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்துள்ளாா். இதைத்தொடர்ந்து அவர் அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க- அமெரிக்காவில் வணிக வளாகத்தை விமானம் மூலம் தகர்க்க முயற்சி
இந்த நிலையில் கோவிந்தனை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் எம்.பி ராஜேஷும் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை துணை பேரவைத் தலைவர் சித்தயம் கோபகுமாரிடம் வழங்கினார்.
ராஜிநாமாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ், பேரவைத் தலைவராக தனது பணி ஒரு கற்றல் அனுபவம் என்று கூறினார். ராஜேஷ் அடுத்த வாரம் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், தலச்சேரி எம்எல்ஏவுமான ஷம்சீர் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.