பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (94) சண்டீகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு தொடா்ந்து லேசான காய்ச்சல் இருந்து வந்ததால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல் நிலை சீராக உள்ளது. வயது அதிகமாகிவிட்டதால் முன்னெச்சரிக்கையாக அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று அவரது கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ள பாதல், கடந்த ஜூன் மாதம் வயிறு பிரச்னை மற்றும் ஆஸ்துமா காரணமாக மருத்துவனையில் சோ்க்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.