வடக்கு வஜிரிஸ்தானில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பழங்குடியினர் மாவட்டத்தின் பாய்யா பகுதியில் பாதுகாப்புப் படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டபோது, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி உள்பட 5 ராணுவ வீரர்கள் மற்றும் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.