14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்

14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்

புது தில்லி: 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு  ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.27.360 கோடி ஒதுக்கீடு செய்யும். மாநில அரசு ரூ.18.125 கோடி ஒதுக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டத்தில் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள் நவீனப்படுத்தப்பட உள்ளன என்று  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டில் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்துவதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com