நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6,395 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,395 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 33 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 6,395 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 4,39,00,204 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 50,342 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 36.31 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மொத்தம் 2.14 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.