ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 759-ஆக உள்ள நிலையில், தொற்று பாதிப்பால் இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஜம்முவில் 9 பேருக்கும், காஷ்மீரில் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 352-ஆக உள்ளது. இதுவரை கரோனா தொற்றில் இருந்து 4,73,623 பேர் குணமடைந்துள்ளனர்.
இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் இன்று ஒரே நாளில் 51 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.