
வீட்டை விட்டு ஓடிய யூடியூபர்: விடியோ வெளியிட்டு மகளைக் கண்டுபிடித்த பெற்றோர்
பெற்றோர் திட்டியதால், வீட்டை விட்டு ஒடிய யூடியூபரான பிஸ்தான் காவ்யா என்று அறியப்படும் மகளை, அதே யூடியூப்பில் விடியோ வெளியிட்டு பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.
தங்களது மகளைக் காணவில்லை என்று பெற்றோர் கதவி அழும் விடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலான நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு ரயிலில் இருந்த காவ்யா கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிக்க | உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
Missing from Aurangabad (Maharashtra) since Sep 9, 16-years-old popular YouTuber Kavya Yadav was tracked in sleeper coach of Gorakhpur bound Kushinagar Express train in Itarsi (MP). She was reunited with parents on Saturday night. @NewIndianXpress @TheMornStandard @santwana99 pic.twitter.com/WUXj87mb4b
— Anuraag Singh (@anuraag_niebpl) September 11, 2022
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் பிரபலமான யூடியூபராக விளங்கி வருபவர் காவ்யா யாதவ். இவரைக் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்த நிலையில், அவரது பெற்றோர் மகளைக் காணவில்லை என்றும் தேடித் தருமாறு கண்ணீருடன் வேண்டிக் கொண்ட விடியோ வைரலானது.
பிறகு காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கி, அவர் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் சென்று கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிக்க | ஆண் குழந்தைக்கு அம்மாவான சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெயர் என்ன தெரியுமா ?
மீண்டும் பெற்றோருடன் இணைந்த அந்த விடியோவும் யூடியூப்பில் வெளியாகி பல லைக்குகளை அள்ளியது. தந்தை திட்டியதால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக அப்பெண் கூறியுள்ளார்.
இந்த யூடியூப்பும், சமூக வலைத்தளப் பக்கங்களும் இளம் தலைமுறையினரை பல சிக்கல்களுக்கு உள்ளாக்கி வருகிறது. அதனை நல்வழிக்கு மட்டும் இளைஞர்கள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே பெற்றோரின் ஆசை.