ஜம்மு - காஷ்மீரில் பேருந்து விபத்து: 4 பேர் பலி

ஜம்மு - காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
படம்: டிவிட்டர்
படம்: டிவிட்டர்

படம்ஜம்மு - காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

பூஞ்சிலிருந்து ரஜோரி நோக்கி இன்று காலை பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மஞ்சகோட் தாலுகா, பீம்பெர் காலி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

பள்ளத்தில் விழுந்த பேருந்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், காவல்துறை, ராணுவம், சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை காயங்களுடன் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தாசில்தார் ஜாவெத் செளத்ரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று காலை பூஞ்ச் ​​மாவட்டத்தில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியான நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக விபத்து ஏற்பட்டிருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com