உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தீர்மானம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு உயரும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தவும், உச்ச நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65-ல் இருந்து 67 ஆக உயர்த்தவும் இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் அலுவலகம், மத்திய சட்டத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.