பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பரப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மத்திய பிரதேசத்தில் சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தைப் பிரதமா் மோடி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். இந்நிலையில், மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘கடந்த 2014-ஆம் ஆண்டில் நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் எண்ணிக்கை 740-ஆகவும் மொத்த பரப்பளவு 1,61,081.62 சதுர கி.மீ. ஆகவும் இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 981-ஆகவும் பரப்பளவு 1,71,921 சதுர கி.மீ.-ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் வன மற்றும் மரங்கள் நிறைந்த பரப்பு 16,000 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது. வனப் பரப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. தனியாரால் பாதுகாக்கப்பட்டு வரும் வனப் பரப்புகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டில் 43-ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை தற்போது 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
நாட்டின் 18 மாநிலங்களில் 52 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றின் மொத்த பரப்பு சுமாா் 75,000 சதுர கி.மீ.-ஆக உள்ளது. உலகின் புலிகள் எண்ணிக்கையில் சுமாா் 75 சதவீதம் இந்தியாவிலேயே உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் 2,226-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் 2,967-ஆக உயா்ந்தது.
புலிகள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியானது கடந்த 2014-ஆம் ஆண்டில் ரூ.185 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 523 என்றிருந்த நிலையில் தற்போது 674-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 7,910-ஆக இருந்தது. தற்போது அது 12,852-ஆக அதிகரித்துள்ளது. இது 60 சதவீத அதிகரிப்பாகும்’’ என்றாா்.