நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,618 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6,298 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,848 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,618 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,53,374 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,302 ஆக உள்ளது.
நாட்டில் இதுவரை 2,16,41,70,550 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 23,92,530 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.