
மஹுவா மொய்த்ரா
மேற்கு வங்கத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா புடவையுடன் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தியுடன் சசி தரூர் திடீர் சந்திப்பு!
பின்னர் போட்டி நடைபெறும் திடலில் இறங்கி, புடவையுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். மேலும், புடவையுடன் ஷூ அணிந்து கால்பந்தை உதைக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கிருஷ்ணாநகர் எம்.பி. கால்பந்துப்போட்டி 2022 இறுதி நிகழ்ச்சியின் மகிழ்ச்சியான தருணங்கள் எனக் குறிப்பிட்டு, ஆம். நான் புடவை அணிந்து கால்பந்து விளையாடுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Fun moments from the final of the Krishnanagar MP Cup Tournament 2022.
— Mahua Moitra (@MahuaMoitra) September 19, 2022
And yes, I play in a saree. pic.twitter.com/BPHlb275WK