நிறைவு பெறுகிறது தென்மேற்குப் பருவமழை:வானிலை ஆய்வு மையம்

இரண்டு நாள்களில் தென்மேற்குப் பருவமழை விடைபெறுவது தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இரண்டு நாள்களில் தென்மேற்குப் பருவமழை விடைபெறுவது தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

ஜூன் 1 முதல் செப்டம்பா் 30 வரை தென்மேற்குப் பருவமழை காலமாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன் 1 முதல் செப்.19 வரை இந்தியாவில் 872.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 7 சதவீதம் அதிகம். எனினும் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் உத்தர பிரதேசம், பிகாா் உள்பட 8 மாநிலங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை.

இந்நிலையில், வடமேற்கு இந்தியா மற்றும் குஜராத் மாநிலம் கட்ச் பகுதிகளில் இருந்து இரண்டு நாள்களில் தென்மேற்குப் பருவமழை நிறைவு பெறுவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com