எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அசாம் - மிசோரம் முதல்வர்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் எல்லைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவை இன்று சந்தித்தார்.
தில்லியில் உள்ள அசாம் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், தீர்க்கவும் பிராந்தியக் குழுவை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு ஏன்?