நாளந்தா பல்கலை.க்கு ரூ.2,700 கோடி: ஜெ.பி.நட்டா

பிகாரிலுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை பேணி பராமரிப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ரூ.2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.  
ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்)
ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்)


பிகாரிலுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை பேணி பராமரிப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ரூ.2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை இன்று (செப்.21) தெரிவித்துள்ளார்.  

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள தாகூர் அரங்கில் இன்று பிற்பகல் பேராசிரியர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. 

இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கல்வி நிறுவனங்கள் எதிர்கால மறுமலர்ச்சியின் பாதையாக திகழ்கின்றன. 

நாலந்தா பல்கலைக் கழகத்தின் பெருமையை பேணிக்காக்கும் வகையில், அதனை மேம்படுத்துவதற்காக ரூ.2700 கோடியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com