நாட்டில் புதிதாக 4,272 பேருக்கு கரோனா; 27 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  4,272 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  4,272 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,83,360 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,611 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும்,  4,474  பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40,750-ஆக குறைந்துள்ளது. இதுவரையில் 4,40,13,999 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  21,63,248  பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 218.17 கோடி தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.72 சதவிகிதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com