ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு கெலாட் வேட்புமனு தாக்கல் செய்வாரா என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, காங்கிரஸ் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை இரவு தில்லி வந்த ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசினார். அப்போது, கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்னைகள் காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கு முன்னதாக தீா்க்கப்பட்டுவிடும் என்றாா்.