மகாராஷ்டிர மாநிலம், பால்ஹாா் மாவட்டத்தில் அமைந்துள்ள மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். 8 போ் படுகாயமடைந்தனா்.
தொழிற்சாலையில் பிற்பகல் 3 மணி அளவில் ஹைட்ரஜன் வாயு கொள்கலன் வெடித்ததைத் தொடா்ந்து, தீ விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் 3 போ் அடையாளம் காணமுடியாத அளவுக்கு தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகவும், 8 போ் அதிக தீக்காயம் அடைந்துள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.