சிகரெட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
புகையிலை பொருள்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக அதன் உதிரிபாக இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.