தில்லியில் அரசு நிதி பெற்று இயங்கி வரும் 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்கு முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நெல்லை தங்கராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
பல ஆண்டுகளாக இந்த 12 கல்லூரிகளின் ஆசிரியர்களும், பணியாளர்களும் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியின் தீனதயாள் உபாத்யாயா கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகள் வழங்கப்படாத ஊதியத்தினை வழங்கக் கோரி கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கல்லூரி தில்லி அரசிடம் இருந்து முழுவதுமாக தங்களது நிதியினைப் பெறுகின்றது.
இது குறித்து தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதூரி கூறியதாவது: கேஜரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு அனுப்புவது தொடர்பாக ஆளுநரிடம் சண்டையிடுகிறது. ஆனால், இந்த 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தில்லி அரசுக்கு கவலை இல்லை என்றார்.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ வெளியீடு குறித்து அறிவிப்பு
இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் கேஜரிவால் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.